Wednesday, 15th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாயே தெய்வம்; உலகுக்கு உணர்த்திய சுவாமி ஐயப்பன்!

டிசம்பர் 10, 2020 06:55

பெற்றவள் நமக்காக செய்யும் தியாகத்தை விட, பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யும் தியாகமே உயர்ந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைத்தவர்தான் சுவாமி ஐயப்பன்..கார்த்திகை மாதத்தில் சுவாமி ஐயப்பனுக்கு விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று அவரை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் லட்சக்கணக்கான பக்தர்கள்.. ஐயப்பன் சுவாமி பற்றிய சில தகவல்கள்கள் இப்போது பார்க்கலாம்...

மகிஷாசுரனின் தங்கையான அரக்கி மகிஷி தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்தாள், அத்துடன் தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்கவும் மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன்தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக் கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர் களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

தேவர்கள் துயரம் தாங்காமல் பரம சிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்ச மான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் சூட்டினார். பகவான் வருகை யால் ராணியும் கருவுற்றாள்.

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். அவனுக்கு ராஜராஜன் என்று பெயர் சூட்டினர். மணிகண்டனின் வருகையால் தான் தனக்கு எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய் விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. 

பின் தனது சூழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகு மென்று அரண்மனை வைத்தியர்களைக்கொண்டுச் சொல்லச் செய்கிறான். இது சூழ்ச்சி என்று தெரிந்த போதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறினர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை வென்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவ னானதால் அது சாத்தியமாகாது என்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப் புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கி வர ஐயன் அருள் செய்தார்.

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோ ஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பல விதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறை வேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந் தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணி கண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவு மில்லை. எல்லாம் லீலைகள்படி நடந் துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். 

மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழுந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத் தம்மனுக்கும் கோயில் கட் டும்படி கூறிவிட்டு மணிகண்ட னாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார். 

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனி வரின் ஆலோசனை யுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரி மலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார். ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 48 நாட்கள் கடும் விரதம் அனு சரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்க ராந்தி தினத்தன்று ஐயப்பன்பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

பெற்ற தாய்க்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய வேண்டும் என்பதற்கு சுவாமி ஐயப்பனே உதாரணம். பந்தள மகாராஜா ராஜ சேகரனின் பிள்ளையாக வளர வேண்டும் என்ப தற்காக காட்டில் அவதரித்தார் தர்ம சாஸ்தா. அவரை ராஜா கண்டெடுத்தபோது, கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்ததால் “மணிகண்டன்’ என்று பெயர் என்ற பெயர் பெற்றார்.

இதற்கு “மணி கட்டப்பட்ட கழுத்தை உடை யவன்’ எனப் பொருள். மணிகண்டனின் ஆற்ற லைப் பொறுக்க முடியாத அமைச்சர்கள் சிலர் அவன் மேல் பொறாமை கொண்டனர். பிள்ளை யில்லாத பந்தள ராஜாவுக்கு மணி கண்டன் வந்த பிறகு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையே அரசாள வேண்டும், மணிகண்டனைக் கொன்று விட வேண்டுமென ராணியிடம் தூபம் போட்டனர் அந்த அமைச்சர்கள்.  ராணி முதலில் மறுத்தாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கு இணங்க மனம் மாறி விட்டாள். தனக்கு தலைவலி போல வடித்து, அரண்மனை வைத்தியரைக் கொண்டு புலிப்பால் கொடுத்தால் தான் குணமாகுமெனக் கூறி, அதைக் கொண்டு வர மணிகண்டனை அனுப்பினாள். 

பெற்றாலும், வளர்த்தாலும் அவள் தாயல்லவா! தாயின் குறைதீர்க்க மணிகண்டன் சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்று புலிகளுடன் வந்தார். பெற்றவள் நமக்காக செய்யும் தியாகத்தை விட, பெற்றவர்களுக்கு பிள்ளைகள் செய்யும் தியாகமே உயர்ந்தது என்பதை உலகுக்கு எடுத்துரைத்தார். 

எனவே ஐயப்பனை தரிசனம் செய்து, அவர் அருளோடு வாழ்வோம்! சுவாமியே சரணம் ஐயப்பா..!
 

தலைப்புச்செய்திகள்